×

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,ஏப்.7: பாண்டிச்சேரியில் நியாய விலை கடை பணியாளர் சங்க மாநிலதலைவர் ஜெயச்சந்திரன் ராஜாவை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். நியாய விலை கடை பணியாளர் சங்கர் உறுப்பினர்கள் சண்முகம், செல்லமுத்து, அழகிரி மகேந்திரன்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நியாய விலை கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரன் ராஜாவை கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Association ,Nagapattinam ,Fair Price Shop Employees Union ,president ,Jayachandran Raja ,Pondicherry ,Tamil Nadu Government Employees Union Demonstration ,Dinakaran ,
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...