சென்னை: தி.நகர் தொகுதியில் துரு பிடித்து சேதமடைந்த கழிவுநீர் குழாய்களை மாற்ற ரூ77.62 லட்சத்தில் பணி தொடங்க உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு ெதரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தி.நகர் ஜெ.கருணாநிதி (திமுக), ஆத்தூர் ஜெயக்குமார் (அதிமுக), விருகம்பாக்கம் பிரபாகரராஜா (திமுக) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து கூறியதாவது: தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனி அழகிரி நகரில் 9 தெருக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த தெருக்களில் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு அழகிரி நகர் 6வது தெருவில் உள்ள சாலையோர கழிவுநீரகற்று நிலையத்துடன் இணைக்கப்பட்டு உந்து குழாய் மூலம் எம்எம்டிஏ காலனியில் உள்ள கழிவுநீர் நிலையத்துடன் இணைத்து கோயம்பேடு சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வந்தது.
தற்போது இந்த உந்து குழாய்கள் துரு பிடித்து சேதமடைந்துள்ளதால் அதை சரிசெய்து லோகநாதன் 3வது தெருவில் உள்ள கழிவுநீரகற்று நிலையத்துடன் இணைக்க ரூ77.62 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்த புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது. இந்த பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் அருகில் உள்ள ஆறுகளில் கலக்காத வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் ஆத்தூர் தொகுதிக்கு முன்னுரிமை தரப்படும். விருகம்பாக்கம் கலைஞர் நகரில் புதிய கழிவுநீர் குழாய் அமைக்க ெடண்டர் கோரப்பட்டு பணி தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு கே.என்.ேநரு தெரிவித்தார்.
The post வடபழனி அழகிரி நகரில் சேதமடைந்த கழிவுநீர் குழாய்கள் ரூ77.62 லட்சத்தில் மாற்றப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.