×

மின்சார ரயில் மோதி மூதாட்டி பரிதாப பலி

ஆவடி: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா அம்மாள் (70). இவரது மகன் மோகன்குமார். திமுக கிளை கழகச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு பவுர்ணமி என்பதால், ஆவடியில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்தார். கோயிலில் பூஜை முடிந்த பிறகு வீட்டிற்கு மீண்டும் திரும்புவதற்காக. ஆவடி ரயில் நிலையத்திற்கு இரவு 7.30 மணி அளவில், வந்தார். பின்னர், ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரி சென்ற மின்சார ரயில் அவர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சார ரயில் மோதி மூதாட்டி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Mutati Parithapa ,Awadi ,Chandra Amma ,Ranipetta District, Cholingar Kudalur ,mokankumar ,Tsagam ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்