- கஜாக்கிரகம் வீவர் தெரு சந்திப்பு
- ஜி.கே.
- ஸ்டாலின்
- திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
- ஆர் கெ காளிகாபுரம்
- பங்கனூர்
- ஹாட் யூனியன்
- கஜால் வானிலை தெரு சந்திப்பு
- தின மலர்
பள்ளிப்பட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள காளிகாபுரம், வங்கனூர் ஆகிய கிராமங்களில் திமுக மாவட்ட நெசவாளரணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைப் பேச்சாளர்கள் வாசு கருணாநிதி, முரசொலி மூர்த்தி, மாநில நெசவாளரணி துணைத் தலைவர் நாகலிங்கம் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். ஒன்றியச் செயலாளர்கள் சண்முகம், பழனி, முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரகு, ஒன்றியக்குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் உமாபதி, அரசு வழக்கறிஞர் ரகு, நிர்வாகிகள் திருவேங்கடம் உட்பட கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post திமுக நெசவாளரணி தெருமுனை கூட்டம் appeared first on Dinakaran.