×

பெங்களூரில் இருந்து பழனிக்குகுட்கா கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.7: கிருஷ்ணகிரி டவுன் எஸ்ஐ சந்துரு மற்றும் போலீசார் புதிய பேருந்து நிலைய பகுதியில் ரோந்து சென்றபோது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில், ₹10,320 மதிப்பிலான 10கிலோ குட்கா இருப்பது தெரிந்தது. விசாரணையில், அவர் பழனி அடுத்த பெரிய கலைமுத்தூர் பகுதியை சேர்ந்த இமாம்தீன்(55) என்பதும், பெங்களூரில் இருந்து பழனிக்கு குட்கா கடத்தி செல்வதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.

The post பெங்களூரில் இருந்து பழனிக்கு
குட்கா கடத்தியவர் கைது
appeared first on Dinakaran.

Tags : Palanikgudka ,Bangalore ,Krishnagiri ,Krishnagiri Town ,SI Sanduru ,Palanikkudka ,Dinakaran ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...