×

பாளை ராஜகோபால சுவாமி கோயில்பங்குனி பிரமோத்ஸவ விழாதீர்த்தவாரியுடன் நிறைவு

நெல்லை,ஏப்.7: பாளையில் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரமோத்ஸ்வ திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. விழாவையொட்டி சுவாமி, தாயார்களுக்கு சிறப்பு வழிபாடு, சிம்ம வாகனம், அனுமன் வாகனம், ஆதிசேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் இரவு வீதியுலா நடந்து வந்தது. கடந்த 31ம் தேதி காலை சிறப்பு திருமஞ்சனமும், இரவு இரட்டை கருட சேவையும் நடந்தது. 9ம் திருவிழாவான கடந்த 4ம் தேதி காலை சுவாமி மற்றும் தாயார்கள் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. மறுநாள் (5ம் தேதி) 10ம் திருவிழாவன்று விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் நடந்தது. இதையொட்டி தாயார்களுடன் திருத்தேரில் சுவாமி எழுந்தருளியதும் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து இரவில் தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் சுவாமி பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் தாயார்கள் ருக்மணி, சத்யபாமா மற்றும் சுவாமி ராஜகோபாலன், சக்கரத்தாழ்வாருக்கான தீர்த்தவாரி வைபவம் வண்ணார்பேட்டை தாமிரபரணி நதிக்கரையில் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். பின்னர் தாயார்கள் ருக்மணி, சத்யபாமா மற்றும் சுவாமி ராஜகோபாலன், சக்கரத்தாழ்வார் கோயிலில் எழுந்தருளும் வைபவம் நடந்தது.

The post பாளை ராஜகோபால சுவாமி கோயில்
பங்குனி பிரமோத்ஸவ விழா
தீர்த்தவாரியுடன் நிறைவு
appeared first on Dinakaran.

Tags : Balai Rajagopala Swami Koilpanguni Brahmotsava ,Thirthavari ,Nellai ,Panguni Brahmotsava festival ,Mannar Rajagopala Swami Temple ,Palai ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...