×

புதுவண்ணாரப்பேட்டையில் போதை பவுடர் விற்ற பிரபல ரவுடி கைது

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட போதை பவுடர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில், புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியான நரேஷ்குமார் (25) என்பதும், இவர் மீது 2 கொலை வழக்கு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது. மேலும், போதை பவுடரை பதுக்கி வைத்து, காசிமேடு பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து அரை கிலோ விலை உயர்ந்த போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நரேஷை கைது செய்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

The post புதுவண்ணாரப்பேட்டையில் போதை பவுடர் விற்ற பிரபல ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Puduvannarapet ,Thandaiyarpet ,Inspector ,Krishnaraj ,Puduvannarapetta police station ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...