×

வழக்கறிஞரை தாக்கிய 3 பேர் கைது: அதிமுக பிரமுகருக்கு வலை

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பரை பாட்டிலால் சரமாரியாக தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய அதிமுக நகர் மன்ற உறுப்பினரை போலீசார் தேடி வருகின்றனர். குன்றத்தூரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (44). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் சைமன்ராஜ் (46). இருவரும் நேற்று குன்றத்தூர் அடுத்த வழுதலம்பேட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் காலி பாட்டிலால், இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில், பலத்த காயமடைந்த 2 பேரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்த தியாகு, ராமு, ரமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து நடத்திய விசாரணையில், இவர்கள் தான் வழக்கறிஞர்கள் என்பது தெரியவந்தது. முக்கிய குற்றவாளியான குன்றத்தூர் அதிமுக நகர் மன்ற உறுப்பினர் ராஜாவை, போலீசார் தேடி வருகின்றனர்.

The post வழக்கறிஞரை தாக்கிய 3 பேர் கைது: அதிமுக பிரமுகருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Kunrathur ,Kunrathur.… ,Dinakaran ,
× RELATED பிரசித்தி பெற்ற குன்றத்தூர்...