×

புரசைவாக்கத்தில் உள்ள கழிவுநீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் (இன்று) 7ம் தேதி காலை 6 மணி முதல் 8ம் தேதி காலை 6 மணி வரை மண்டலம்-8க்கு உட்பட்ட புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. எனவே, மண்டலம் 4, 5, 6, 7, 8 மற்றும் 9க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற கீழ்க்காணும் பகுதி அலுவலர்களையும் மற்றும் தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் தொடர்பு கொள்ளவும்.

பகுதி பொறியாளர் 4ஐ 8144930904 என்ற எண்ணிலும், பகுதி பொறியாளர் 5ஐ 8144930905 என்ற எண்ணிலும், பகுதி பொறியாளர் 6ஐ 8144930906 என்ற எண்ணிலும், பகுதி பொறியாளர் 7ஐ 8144930907 என்ற எண்ணிலும், பகுதி பொறியாளர் 8ஐ 8144930908 என்ற எண்ணிலும், பகுதி பொறியாளர் 9ஐ 8144930909 என்ற எண்ணிலும், சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்தை 044-45674567 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

The post புரசைவாக்கத்தில் உள்ள கழிவுநீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Purasaivak ,Water Board ,Chennai ,Purasaivakkam ,Chennai Drinking Water Board ,Purasaivakam ,Water Treatment Board ,Dinakaran ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...