×

காசி தமிழ் சங்கமம் குறித்து சூலூர் பெண்களுக்கு மோடி தமிழில் கடிதம்

சூலூர்: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 17 முதல் டிசம்பர் 16வரை காசியில் நடைபெற்றது. இதற்காக, தமிழகத்தின் 12 வெவ்வேறு இடங்களில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் மூலம் சுமார் 2500 பேர் சென்று திரும்பினர். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த சூலூர் முத்துகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த துளசியம்மாள் மற்றும் ராஜாமணி பிரதமர் மோடிக்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து கடிதம் எழுதி இருந்தனர். இதற்கு பிரதமர் மோடி, இருவருக்கும் தமிழில் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். கடிதத்தை பெற்றுக் கொண்ட துளசியம்மாள் மனமகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

The post காசி தமிழ் சங்கமம் குறித்து சூலூர் பெண்களுக்கு மோடி தமிழில் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Soulur ,Kasi ,Ghasi ,Tamil Nadu ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...