×

ஒரு எலுமிச்சை ரூ.31,500க்கு ஏலம்

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் சின்னமயிலம் என்கின்ற ஸ்ரீ ரத்தினவேல் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது. இதில் ரத்தினவேல் முருகனுக்கு எலுமிச்சம்பழம் வைத்து 11 நாட்கள் பூஜை செய்து, அந்த பழத்தை முருகனின் வேலில் ஒவ்வொரு நாளும் செருகப்படும். இந்த எலும்மிச்சம் பழங்கள் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் ஏலம் விடப்பட்டது. முதலில் முதல் நாள் உற்சவ பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம் ஏலம் விடப்பட்டது. அந்த எலுமிச்சம்பழத்தை ரூ.31,500க்கு புதுவையைச் சேர்ந்த பிரபாகரன்- ராஜலட்சுமி தம்பதி ஏலத்தில் வாங்கினர். அதனைத் தொடர்ந்து ஒன்பது எலுமிச்சம்பழங்களும் ரூ.69 ஆயிரத்து 800க்கு ஏலம் விடப்பட்டன.

The post ஒரு எலுமிச்சை ரூ.31,500க்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Thiruvanneinallur ,Sri Ratinavel Murugan Temple ,Ottenanthal ,Viluppuram District ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா