×

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க்: காரைக்குடி, ராசிபுரத்தில் ரூ.70 கோடியில் மினி டைடல் பூங்காக்கள்; அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

திருச்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த ரூ.600 கோடியில் டைடல் பார்க் நிறுவப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை 2023-24ம் ஆண்டிற்கான தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். மேலும் 22 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி,

  • சிப்காட் – இருங்காட்டுக் கோட்டை தொழிற்பூங்கா மற்றும் செய்யாறு தொழிற்பூங்காக்களில், தொழிலாளர்களின் தங்குமிட தேவையை பூர்த்தி செய்ய தலா 200 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு தங்குமிடங்கள் மொத்தம் ரூ.20 கோடி திட்டம் அமைக்கப்படும்.
  • சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஸ்மார்ட் நீர் அளவீட்டு அமைப்புகள் ரூ.20 கோடியில் உருவாக்கப்படும்.
  • மணப்பாறை, தேனி, திண்டிவனம் மற்றும் சூளகிரி ஆகிய சிப்காட்டில் 4 புதிய தொழிற்பூங்காக்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.
  • விருதுநகர், சூளகிரி மற்றும் தேனி ஆகிய சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.4.50 கோடியில் நிர்வாக அலுவலக வளாகம் கட்டப்படும்.
  • மறுசுழற்சி முறையில் பெறப்படும் நீரினைக் கொண்டு ஒன்பது சிப்காட் தொழிற்பூங்காக்களின் தொழில் நீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.1.20 கோடி திட்டம் விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  • சிப்காட் நிறுவனம், ரூ.90 லட்சத்தில் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கப்படும். சிப்காட் நிறுவனம், 3000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு, ரூ.25 லட்சத்தில் புவியியல் தகவல் முறைமை வரைபடம் ஏற்படுத்தப்படும்.
  • திருவள்ளூர் காரணியில் சுமார் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி பாதுகாப்புத்துறை சார்ந்த மின்னணுவியல் மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும்.
  • நகரங்களுக்கு இடையேயான வான்வெளி பயணத்திற்கு, தமிழ்நாடு வான்வழி இணைப்புத் திட்டத்திற்கான வழிமுறை வகுக்கப்படும். டைசல் உயிரியின் முகவரி என்ற பெயரில் டைசல் புத்தாக்க மையம் சுமார் ரூ.10 கோடியில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் அமைக்கப்படும்.
  • தொழில் துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் திட்டங்களை விரைவாகவும், முழு செயல்திறனோடும், பொறுப்புணர்வோடும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய, தலைமைப் பொறியாளர் அல்லது கண்காணிப்புப் பொறியாளர் தலைமையில் ஒரு பிரத்யேக பொறியியல் பிரிவு உருவாக்கப்படும்.
  • திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த 10 லட்சம் சதுர அடியில் ரூ.600 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) ஒன்று நிறுவப்படும்.
  • காரைக்குடி மற்றும் ராசிபுரத்தில் ரூ.70 கோடியில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • அரியலூர் சிமென்ட் வளாகத்தில் இயங்கும் அரசு நகர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் ஆய்வகம் மற்றும் இயற்பியல் ஆய்வுக்கூடம் உள்பட நான்கு வகுப்பறைகள் ரூ.1.32 கோடியில் கட்டப்படும். வளாகத்தை சுற்றி 3400 மீட்டர் நீளம் புதிய வளாகச் சுவர் ரூ.4 கோடி செலவில் கட்டப்படும். ஆனந்தவாடி மற்றும் கல்லங்குறிச்சி சுரங்க குத்தகை எல்லையை ஒட்டி இரும்பு முள்வேலி, மூடிய மின்சுற்று தொலைக்காட்சி கருவிகள் ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • டான்செம் நிறுவன வள திட்டமிடல் ரூ.5.20 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

The post தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க்: காரைக்குடி, ராசிபுரத்தில் ரூ.70 கோடியில் மினி டைடல் பூங்காக்கள்; அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tidal Park ,Trichy ,Karaigudi, Razipura ,Minister Gold ,South AICC ,Industry ,Minister ,South India ,Karaigudi, Rasipuram ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...