×

நாளை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாஸ் வாங்க குவிந்த வேட்பாளர்கள் முகவர்களால் தள்ளுமுள்ளு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய 49 ஊராட்சிகள், 22 ஒன்றியக் கவுன்சிலர்கள், 2 மாவட்டக் கவுன்சிலர்கள் பதவிகளுக்கு கடந்த 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 288 வாக்குச் சாவடிகளில் இருந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் கேளம்பாக்கம் அருகே படூர் இந்துஸ்தான் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை மைய அனுமதிச்சீட்டு நேற்று திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்த அனுமதிச் சீட்டை பெறுவதற்காக நேற்று ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும், அவர்களின் முகவர்களும் தங்களின் அடையாள அட்டையோடு ஒன்றிய அலுவலக வளாகத்தில் குவிந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அலுவலகத்தின் பிரதான வாயிற்கதவு மூடப்பட்டு ஜன்னல் வழியாக வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் முகவர் அனுமதிச் சீட்டு பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் வந்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி வரை வாக்கு எண்ணிக்கை மைய முகவர் அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். …

The post நாளை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாஸ் வாங்க குவிந்த வேட்பாளர்கள் முகவர்களால் தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.

Tags : Thiruporur ,Thiruporur Union ,Dinakaraan ,
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...