×

விபத்தில் மகன் இறந்ததை கேட்டு சிகிச்சையில் இருந்த தந்தை சாவு: பரமக்குடியில் பரிதாபம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள மஞ்சள்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு கார்த்திக் ராஜா என்ற மகனும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். பெண் பிள்ளைகளை மதுரையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். கார்த்திக் ராஜாவுக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். கார்த்திக் ராஜா ராமநாதபுரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.

அதில் வரும் வருமானத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார்.இந்நிலையில், முருகேசன் உடல் நலக்குறைவால் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உள்ள தந்தையை பார்த்துவிட்டு, டூவீலரில் வீட்டிற்கு திரும்பிய கார்த்திக் ராஜா பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரவுண்டானாவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த முருகேசன், அதிர்ச்சியில் மருத்துவமனையில் உயிரிழந்தார். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மகன் இறந்த தகவல் கேட்டு தந்தையும் உயிரிழந்த சம்பவம் பரமக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post விபத்தில் மகன் இறந்ததை கேட்டு சிகிச்சையில் இருந்த தந்தை சாவு: பரமக்குடியில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Saavu ,Paramakudi ,Murugesan ,Manjalpatnam ,Paramakudi, Ramanathapuram District, Paramakudi ,Karthic Raja ,Aramakkut ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்