×

மாணவ- மாணவிகள் ஆடிட்டராக ஸ்ரீ குரு சர்வா சி.ஏ. அகாடமி

திருப்பூர், ஏப். 6: திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே  குரு சர்வா சி.ஏ. அகாடமி ஆடிட்டர் படிப்புகளுக்கு என முழுநேரமும் பிரத்யேகமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு பயின்ற அனைவரும் ஆடிட்டராக உருவாகி நல்ல நிலையில் இருந்து வருகிறார்கள். இந்த அகாடமி கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் அளவில் சி.ஏ. பவுண்டேஷன் தேர்வில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இதுபோல் இன்டர் பிரிவிலும் தேசிய அளவில் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது. இங்கு படித்து வருகிற மாணவ-மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவு தேர்ச்சி பெற்று வருகிறார்கள். இது குறித்து ஸ்ரீ குரு சர்வா சி.ஏ. அகாடமி தலைமை செயல் அதிகாரி அருணாச்சலம் கூறியதாவது: ஆடிட்டர் படிப்புகளை படிக்க பெருநகரங்களில் மட்டுமே முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இதனை மாற்றி திருப்பூரிலேயே படிக்கிற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள ஆசிரியர்கள் குழு ஒவ்வொரு மாணவர்களின் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தி அடிக்கடி மாதிரி தேர்வு நடத்தி, கூடவே பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தி வருகிறது.

அதன் காரணமாகவே கடந்த டிசம்பர் 22 தேர்வில் 7 மாணவர்கள் டிஸ்டிங் சஷனில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், பல மாணவர்கள் முதல் முயற்சியிலேயே சி.ஏ.. இன்டர் தேர்வில் இரண்டு குரூப்புகளிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அளவான அடங்கள், ஒவ்வொருவரின் மீதும் தனிப்பட்ட கவனம் முழு நேர பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த ஆடிட்டர்களால் வகுப்புகள் எடுக்கப்படுவது போன்ற காரணங்களால் தொடர்ந்து பல மாணவர்கள் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்து வருகின்றனர். கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருப்பவர்களும், 12-ம் வகுப்பு படித்துக்கொள்ளக்கூடிய மாணவர்கள் எந்த பாடப்பிரிவாக இருந்தாலும், இப்போதே பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இந்த படிப்புகள் குறித்த இலவச ஆலோசனைக்கு 9600922888 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாணவ- மாணவிகள் ஆடிட்டராக ஸ்ரீ குரு சர்வா சி.ஏ. அகாடமி appeared first on Dinakaran.

Tags : Sri Guru Sarva CA ,Tirupur ,Guru Sarva C.A. ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...