×

பக்தர்களுக்கு அன்னதானம்

தொண்டி, ஏப்.6: தொண்டி விநாயகர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலை தொண்டி போலீஸ் ஸ்டேன் முன்பு உள்ள பொன் வழிவிடு விநாயகர் கோயில் உள்ளது. இங்கு நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் சந்தனம், இளநீர் உட்பட 12 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post பக்தர்களுக்கு அன்னதானம் appeared first on Dinakaran.

Tags : Thonti Vinayagar Temple ,Bankuni Uttri ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது