×

வழிப்பறி வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

மேட்டுப்பாளையம்,ஏப்.6: அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலியை வழிப்பறி செய்ததாக சூலூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(30) என்பவர் கைது செய்யப்பட்டார்.பின்னர்,அவர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையானது மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தவழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று சார்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் என்பவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்தும் பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

The post வழிப்பறி வாலிபருக்கு 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Madtupalayam ,Annur Police-Station ,Annur ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...