×

ராங்கியம் கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருமயம், ஏப்.6: திருமயம் தொகுதி ராங்கியம் கிராமத்தில் திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் திமுகவில் ஒரு கோடி புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வடக்கு ஒன்றியம் சார்பில் ராங்கியம் கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் பேசும்போது, இந்தியா அளவில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி வருவதோடு மற்ற மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும் தமிழக மக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார். எனவே திமுக நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்தி முதலமைச்சரின் உத்தரவின்படி இலக்கை அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் சிதம்பரம், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ராங்கியம் கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Rangiyam village ,Tirumayam ,Rangiyam ,Thirumayam ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...