×

நெல்லிக்குப்பம் வீரபத்ர சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் காவடி ஊர்வலம்

நெல்லிக்குப்பம் ஏப். 6: நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் வீரபத்திர சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.கோயிலில் பங்குனி மாத உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. 10 நாள் உற்சவமான பங்குனி உத்திர காவடி விழா நடந்தது.

இதனை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத வீரபத்ர சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட காவடி மற்றும் பால்குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பின்னர் வள்ளி தேவசேனா வீரபத்ர சுப்பிரமணிய சுவாமிக்கு மகாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். லோகு அய்யர் சிறப்பு பூஜைகள் செய்தார். இரவு அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வீரபத்ர சுப்பிரமணிய சுவாமி தம்பதியர்களாக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

The post நெல்லிக்குப்பம் வீரபத்ர சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் காவடி ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Nellikupam Veerapatha Subramanian Swami Temple ,Weerapadra Subramanian Swami Temple ,Goosebalakam Subhatambakkam ,Prudra Brahmorsava ,Kavadi ,Gooseberry Veerabadhraamiya Swami Temple ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது