×

அதிமுக உறுப்பினருக்கு பாராட்ட மனமில்லை: வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தமிழக சட்டபேரவையில் வேளாண் துறை மீதான விவாதம் நடந்தது. இதில் பங்கேற்று அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது: கீழ் வேளூரில் வேளாண் கல்லூரி அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டு மாணவர் சேர்க்கையும் நடந்துள்ளது. ஆனால், கட்டிடம் கட்ட இந்து சமய அறநிலைய துறையின் இடத்தை தரமுடியாது என்று கூறிவிட்டது.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு: என்றைக்கும் இடத்தை தர முடியாது என்று இந்து சமய அறநிலையத் துறை சொல்லாது. அரசு வழிகாட்டி மதிப்பில் 0.5 சதவீத தொகையை கொடுத்தால், குத்தகைக்கு தர சட்டம் உள்ளது.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: உறுப்பினருக்கு பாராட்ட மனமில்லை.

ஓ.எஸ்.மணியன்: வேளாண் துறை அமைச்சரை பாராட்ட முடியாது. 4 வேளாண் கல்லூரிகளை தொடங்குவதாக அறிவித்தீர்கள். ஒன்றுக்கு கூட கட்டிடம் கட்டப்படவில்லை.
எஸ்.பி.வேலுமணி (அதிமுக): எங்கள் உறுப்பினர் பேசும்போது, அடுத்த உறுப்பினருக்கு இடையில் பேச வாய்ப்பு தருகிறீர்கள். அப்போது, அரிசி பற்றி பேசும்போது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச வாய்ப்பு கேட்டார். அப்போது, வாய்ப்பு வழங்கவில்லை. பாரபட்சமாக நடந்து கொள்கிறீர்கள்.

துரைமுருகன்: எப்போதுமே முன்வரிசை உறுப்பினர்களுக்கு முன்னுரிமை உண்டு.
ஓ.எஸ்.மணியன்: வேளாண் கல்லூரி அவசியம் வேண்டும்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: கீழ் வேளூர் வேளாண் கல்லூரிக்கு இந்து சமய அறநிலைய துறை இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. மேலும், 2 வேளாண் கல்லூரிக்கு இடம் தேர்வு செய்து, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

The post அதிமுக உறுப்பினருக்கு பாராட்ட மனமில்லை: வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Minister of Agriculture ,M. R.R. K.K. Bannerselvam ,Tamil Nadu Legislative Assembly ,O.A. S.S. ,Velore ,M. R.R. K.K. ,Bannerselvam ,Dinakaran ,
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...