×

புதுகை அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கோடியக்கரையில் நேற்று மாலை மர்ம பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த மீனவர்கள் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில், அது இலங்கையில் இருந்து வந்த பைபர் படகு என்பதும், அந்த படகில் ஒரு இன்ஜின், ஒரு டீசல் கேனும், படகின் உள்பகுதியில் இலங்கை மொழியில் எழுதப்பட்டும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து படகை பறிமுதல் செய்து கோட்டைப்பட்டினம் கடலோர காவல்படை போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்த படகில் வந்தவர்கள் யார், கடத்தல்காரர்களா, இப்போது எங்கிருக்கிறார்கள் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுகை அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Kodiyakaram ,Madamalgudi, Pudukkottai district ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...