×

கானா பாட்டு பாடி மாணவிக்கு பாலியல் தொல்லைபோக்சோவில் வாலிபர் கைது

பெரம்பூர்: கானா பாட்டு பாடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 36 வயது பெண். இவரது தங்கை கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டதால் அவரது 13 வயது மகளை அந்த பெண் தத்தெடுத்து வளர்த்துவந்தார். அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், தினமும் பள்ளிக்கு செல்லும்போது கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் 4வது தெருவை சேர்ந்த அருண் என்கின்ற மூக்கு அருண் (28) என்பவர் மாணவியை பார்த்து கானா பாடல்களை பாடி தொல்லை கொடுத்துள்ளார்.

கடந்த 2ம் தேதி மாலை கானா பாடல் பாடி மாணவியின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது வீட்டுக்கு வந்ததும் நடந்தது பற்றி தனது சித்தியிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின்படி, எம்கேபி.நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நசீமா தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து நேற்று அருணை கைது செய்தனர். விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அருணை கைது செய்தனர். இதன்பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கானா பாட்டு பாடி மாணவிக்கு பாலியல் தொல்லை
போக்சோவில் வாலிபர் கைது
appeared first on Dinakaran.

Tags : Boxo ,Perampur ,Pattu ,Badi ,Chennai ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது