×

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் வீசி 2 குழந்தைகள் கொலை-தற்கொலைக்கு முயன்ற தந்தை மருத்துவமனையில் அனுமதி

தோகைமலை : கரூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தையை போலீசார் மீட்டனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா சிவாயம் தெற்கு ஊராட்சி ஆதனூரை சேர்ந்தவர் முருகேசன்(35). ஜேசிபி டிரைவர். இவரது மனைவி பழனியம்மாள் (எ) பிரியா(27). இவர்களுக்கு ருதுஷ்னா (4), கிருஷ்ணா(2) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். முருகேசனுக்கும், பிரியாவுக்கும் இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்தது. இதனால் முருகேசன், தனது மனைவி மீது விரக்தியில் இருந்தார்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தனது இரண்டு குழந்தைகளையும் பைக்கில் எற்றிக்கொண்டு தோகைமலை அருகே மருதூர் என்ற இடத்தில் சென்ற போது அங்கு 100 அடி ஆழ கிணறு இருந்ததை பார்த்த முருகேசன், பைக்கை நிறுத்தினார். இதில் 2 குழந்தைகளையும் கிணற்றுக்குள் தூக்கி வீசினார். பின்னர் அவரும் கிணற்றில் குதித்தார். அப்போது முருகேசன் கையில் அடிப்பட்டதால் வலி தாங்க முடியாமல் அலறினார். அப்போது அப்பகுதியில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்து கிணற்றை எட்டி பார்த்த போது முருகேசன் தண்ணீரில் தத்தளித்ததும், 2 குழந்தைகள் சடலமாக மிதந்ததும் தெரிய வந்தது.தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வீரர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகேசனையும், சடலமாக மிதந்த 2 குழந்தைகளையும் வெளியே கொண்டு வந்தனர். முருகேசன் கைமுறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் போலீசார் 2குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்….

The post மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் வீசி 2 குழந்தைகள் கொலை-தற்கொலைக்கு முயன்ற தந்தை மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Dokhaimalai ,Karur ,
× RELATED முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு