×

வாடகை பாக்கி செலுத்தாத 13 கடைகளுக்கு சீல்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டல அதிகாரி பரந்தாமன் உத்தரவின்பேரில், அந்த மண்டலத்தில் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ள 50 கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்கள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி தொகை எவ்வளவு என்பது குறித்து விவரம் சேகரிக்கப்பட்டது. இதில், 13 கடைகள் ரூ.12 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளது தெரியவந்தது. சம்மந்தப்பட்ட நபர்களிடம், வாடகை பாக்கியை செலுத்த கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வரி பாக்கியை செலுத்தவில்லை. இதனையடுத்து, உதவி வருவாய் அலுவலர்கள் முருகேசன் மற்றும் லட்சுமண குமார் தலைமையில் உரிமம் ஆய்வாளர் யுவராஜ் மற்றும் ஊழியர்கள் நேற்று ஜமாலியா பகுதியில் மரக்கடைகள், நெட் சென்டர் உள்ளிட்ட 8 கடைகளுக்கும், பட்டாளம் பகுதியில் 5 கடைகளுக்கும் சீல் வைத்தனர்….

The post வாடகை பாக்கி செலுத்தாத 13 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Chennai Corporation ,Thiruvika ,Nagar ,Officer ,Paranthaman Utdaravinbar ,Paki ,Dinakaran ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...