×

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத கோவை பெண் இன்ஸ்பெக்டர் திடீர் சஸ்பெண்ட்

கோவை: கோவை மாவட்டத்தில் தீவிர குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கலையரசி. இவர், கோவைபொருளாதார குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது மோசடி நிதி நிறுவனங்களின் மீது பாதிக்கப்பட்டமக்கள் அளித்த புகாரின்பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் கால தாமதமாக வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. சில வழக்குகளில் குற்றவாளிகள் எளிதில் தப்பும் வகையில் இன்ஸ்பெக்டர் கலையரசி சாதகமாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை அடிப்படையில் கோவை சரக டிஐஜி முத்துச்சாமி, கலையரசியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்….

The post புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத கோவை பெண் இன்ஸ்பெக்டர் திடீர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kalaiyarasi ,Coimbatore Economic Crimes Unit ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...