×

கட்டி முடித்து 4 ஆண்டுகளாச்சு… வாஞ்சிநாதன் பல்நோக்கு கட்டிடத்தை திறக்க கோரிக்கை

ஓட்டப்பிடாரம்: வாஞ்சி மணியாச்சியில் கட்டி முடித்து 4 ஆண்டாகியும் திறக்கப்படாத சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதன் பல்நோக்கு கட்டிடத்தை உடனே திறக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,   ஓட்டப்பிடாரம் யூனியன் வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிர்புறம் சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதன் நினைவாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுமார்  ரூ.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்தும் இன்று வரையிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படாமல் உள்ளது. மேலும் அக்கட்டிடத்தில் இளம் தலைமுறையினர் அறிந்திடும் வகையில் வாஞ்சிநாதனின் புகைப்படங்கள், வரலாற்றுப் புத்தகங்கள் ஆகியன இடம்பெறச் செய்து பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் திறந்து வைக்கக் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post கட்டி முடித்து 4 ஆண்டுகளாச்சு… வாஞ்சிநாதன் பல்நோக்கு கட்டிடத்தை திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vanchinathan ,Ottapidaram ,Vanchi Maniachi ,
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்