×

டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (35). கூலி தொழிலாளி. ேநற்று புன்னப்பாக்கம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார். அப்போது அந்த டிராக்டரின் முன்பக்க சக்கரம் எதிர்பாரதவிதமாக பள்ளத்தில் இறங்கியது. இதை தொடர்ந்து டிராக்டரை இயக்க முயற்சி செய்தபோது டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து ஜெகதீசன் அடியில் சிக்கி கொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். …

The post டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Jegadeesan ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்