×

ஆவத்திபாளையத்தில் வேகத்தடையில் ஜீப்ரா கோடுகள்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்திலிருந்து குமாரபாளையம் செல்லும் வழியில் உள்ள ஆவத்திபாளையத்தில் விசைத்தறி மற்றும் சாயத்தொழில் அதிகரித்து வருகிறது. இதற்காக தினம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பேருந்து நிறுத்தம் அருகே பழைய பாலத்தையும், சாலையையும் ஆக்கிரமித்து கடைகள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளதால், சாலை குறுகலாகி எதிரே வரும் வாகனங்கள் எளிதாக தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். விபத்துகளை தவிர்க்க, பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து எம்பி கணேசமூர்த்தி கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவரது அறிவுறுத்தல்படி, 10 நாட்களுக்கு முன் ஆவத்தி பாளையத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடை சரிவர தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து, ஒன்றிய திமுக மகளிரணி அமைப்பாளர் ராதாமணி ராமலிங்கம் தலைமையில், கட்சியினர் நேற்று வேகத்தடையில் ஜீப்ரா கோடுகள் வரையும் பணியில் ஈடுபட்டனர்….

The post ஆவத்திபாளையத்தில் வேகத்தடையில் ஜீப்ரா கோடுகள் appeared first on Dinakaran.

Tags : Avathipalayam ,Pallipalayam ,Kumarapalayam ,Dinakaran ,
× RELATED தனிப்பிரிவு காவலரின் குழந்தைகளுக்கு தங்கம்