×

தூத்துக்குடியில் ரூ.3 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு

தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (38). இவருக்கும், தூத்துக்குடி கொத்தனார் காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகள் ஜெபமலர் (28) என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஜெபமலருக்கு மறு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர். இதனால், அந்த குழந்தையை அவரது பெற்றோர் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளனர்.  இதையடுத்து ஜெபமலர், சகோதரர் அந்தோணி, தாயார் கிருபா, தந்தை செல்வராஜ், மாமா டேனியல் ஆகியோர் திருமண புரோக்கர் ஜேசுதாசை அணுகி உள்ளனர். அவர், மற்றொரு புரோக்கரான ராஜபாளையம் கார்த்திகேயன் மூலமாக குழந்தையை விற்க பேசி உள்ளனர். ஜெபமலர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கணவர் மணிகண்டனுக்கு தெரியாமல் குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு கடந்த மாதம் 24ம் தேதி நாகர்கோவிலை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியருக்கு விற்பனை செய்துள்ளார். இதனையறிந்த மணிகண்டன் தனது குழந்தையை மீட்டு தருமாறு தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெபமலரிடம் இருந்து குழந்தையை ரூ.3 லட்சம் பணம் கொடுத்து வாங்கிய நாகர்கோவில் மேலசூரங்குடி பகுதியைச் சேர்ந்த செல்வமணி (52) அவரது மனைவி ஸ்ரீதேவி (40) மற்றும் அதற்கு உதவியாக இருந்த கார்த்திகேயன் (30) ஆகிய 3 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 9 மாத ஆண் குழந்தை, தந்தை மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை விற்பனை செய்த தாய் ஜெபமலர், அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல், புரோக்கர் ஜேசுதாஸ் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். …

The post தூத்துக்குடியில் ரூ.3 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Thuthukudi ,Rajendran ,Manikandan ,Virudhunagar District Arupukkotta ,Selvaraj ,Chotthukudi Kothanar Colony ,Toothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...