×

அடுக்குமாடி குடியிருப்பில் 4 பைக், கார் எரிந்து நாசம் மனைவி டார்ச்சர் தாங்காமல் கணவர் எரித்தது அம்பலம்

அண்ணாநகர்: நெற்குன்றம், சண்முக நாதர், சத்தியம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கார், மொபட் மற்றும் 3 பைக்குகள் கடந்த 25ம் தேதி எரிந்து நாசமானது. போலீசார் விசாரணையில் அதே குடியிருப்பில் வசிக்கும் வேண்டாமணியின் கணவர் சதீஷ் (26), வாகனங்களை எரித்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது: கோயம்பேட்டை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி வேண்டாமணி (29), கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்து, 5 வயது மகனுடன் மேற்கண்ட குடியிருப்பில் வசிக்கிறார். இதனிடையே, வேண்டாமணி அடிக்கடி செல்போனில் சதீஷை தொடர்புகொண்டு டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் நெற்குன்றம் வந்த சதீஷ், அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த மனைவியின் மொபட்டை எரித்துள்ளார். தீ பரவி அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் 3 பைக்குகளும் எரிந்துள்ளது. பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார். இவ்வாறு கூறினர். …

The post அடுக்குமாடி குடியிருப்பில் 4 பைக், கார் எரிந்து நாசம் மனைவி டார்ச்சர் தாங்காமல் கணவர் எரித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Annagar ,Nedkududam ,Shanmuka Nadar ,Satyam Street ,Apartments ,
× RELATED காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய...