×

போக்குவரத்து விதிமுறை மீறல்; வாகன ஓட்டிகளுக்கு அபராதம்: போலீசார் நடவடிக்கை

திருவள்ளூர்: சென்னை வடக்கு சரக துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் வட்டார போக்குவரத்து அலுவலர் சு.மோகன் தலைமையில், போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன், போக்குவரத்து ஆய்வாளர்கள் கா.பன்னீர்செல்வம், ஜி.மோகன் ஆகியோர் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமலும் முகக்கவசம் அணியாமலும் வந்தவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பக்க கண்ணாடிகள் இல்லாத வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் உள்பட 250க்கும் மேற்பட்ட நபர்களை தடுத்து நிறுத்தி ₹35ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர்களுக்கு டிஎஸ்பி சந்திரதாசன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் தலை கவசம் அணிவது குறித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். …

The post போக்குவரத்து விதிமுறை மீறல்; வாகன ஓட்டிகளுக்கு அபராதம்: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Deputy Transport Minister ,Ravichandran ,Chennai North Sarakha ,Thiruvallur ,Kamarajar ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...