திருமங்கலம், மார்ச் 28: திருமங்கலம் வெளியூர் பஸ்ஸ்டாண்ட் அருகே டவுன் போலீஸ் ஸ்டேசன், தாலுகா போலீஸ் ஸ்டேசன், டிராபிக் ேபாலீஸ் ஸ்டேசன் என அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதில் டிராபிக் போலீஸ் ஸ்டேசன் அருகேயுள்ள காலியிடத்ததில் மாற்று பணி, வெளியூர் பணிகளுக்கு செல்லும் போலீசார் தங்களது டூவீலர்களை நிறுத்தி செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் தங்களது டூவீலர்களை பாதுகாப்பாக டிராபிக் ஸ்டேசனில் நிறுத்தி செல்ல துவங்கினர். இதனை தொடர்ந்து தற்போது தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் இங்கு தங்களது டூவீலர்களை நிறுத்தி செல்ல துவங்கினர்.
இதனால் டிராபிக் ஸ்டேசன் வளாகம் மினி டூவீலர் ஸ்டாண்டாக மாறியது. இதன் காரணமாக டிராபிக் இன்ஸ்பெக்டர்கள் ஜீப் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இயலவில்லை.
இதனால் டிராபிக் ஸ்டேசனில் அதிகரித்து வந்த டூவிலர்களை கட்டுபடுத்த போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அதாவது டிராபிக் போலீஸ் ஸ்டேசனின் நுழைவு வாசலை பூட்டிவிட்டனர். கதவில் போலீசார் வாகனத்தை தவிர்த்து பிற அன்னிய வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை என போர்டு மாட்டியுள்ளனர். இதனால் தற்போது திருமங்கலம் டிராபிக் போலீஸ் ஸ்டேசன் பளிச்சிடுகிறது. அதேநேரத்தில் போலீசார் ஸ்டேசன் கதவு பூட்டி இருப்பதால் தங்களது டூவீலர்களை நிறுத்த சுற்றி செல்ல வேண்டியிருப்பதாக புலம்பி வருகின்றனர்.