×

(தி.மலை) ரேணுகாம்பாள் கோயிலில் யானை லட்சுமி சிறப்பு வழிபாடு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் அளித்தது படவேட்டில் ராமநவமி பிரமோற்சவ விழா

கண்ணமங்கலம், மார்ச் 28: படவேட்டில் ராமநவமி பிரமோற்சவ விழாவையொட்டி ரேணுகாம்பாள் கோயிலில் யானை லட்சுமி சிறப்பு வழிபாடு செய்தது. மேலும் அங்குவந்த பக்தர்களை ஆசீர்வாதம் செய்தது. திருவண்ணாமலை மாவட்டம் படவேடு ராமசந்திர சுவாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி ரேணுகாம்பாள் கோயிலில் கொடியேற்றத்திற்கான கயிறு, கொடி உள்ளிட்ட மங்கல பொருட்கள் அம்மனிடம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ராமர் கோயில் யானை லட்சுமியுடன் ராமர் கோயிலை ஊர்வலமாக சென்றடைந்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி ஆசீர்வதித்தது. இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை ராமநவமி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி வழிகாட்டுதல்படி செயல் அலுவலர் சிவஞானம் தலைமையில் மேலாளர் மகாதேவன் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

Tags : T.Malai ,Renukampal ,Temple ,Elephant Lakshmi ,Rama Navami Brahmotsavam ,Padaved ,
× RELATED இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவித்த...