கோவை, மார்ச் 27: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு கண்டித்து இப்போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி, மாநில துணை தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான அழகு ஜெயபாலன், மாநில செயலாளர் வி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர். வட்டார தலைவர் நாகராஜ் வரவேற்றார். இப்போராட்டத்தில், நிர்வாகிகள் மீனாஹரி ராமலிங்கம், கோவிந்தராஜ், வெங்கிடபதி, சொக்கம்புதூர் கனகராஜ், வி.எம்.ரங்கசாமி, செல்வபும் ஆனந்த், சக்திசதீஷ், சாமிநாதன், நடராஜ், காயத்ரி, வெங்கடாசலம்,
ரகமத்துல்லா, சவுந்தர்ராஜன், சோமனூர் பாலசுப்பிரமணியம், மேட்டுப்பாளையம் தங்கமணி, சுகுணாபுரம் ஆனந்த், பொன்ராஜ், ஜமாலுதீன், ஐ.எஸ்.மணி, ஆகாஷ், பேரூர் மயில், சுடர்விழி, விளம்பரம் ராமசாமி, பொன்மகள் கணேஷ், அருள் அந்தோணி, சுடர்விழி, ராஜ்குமார், வேலுமணி, வேடப்பட்டி செல்வம், சாமளாபுரம் வேலுசாமி, சூலூர் கண்ணன், கனகு, அருண், ஆதித்யன், சச்சிதானந்தமூர்த்தி, இந்துராஜ், கிருஷ்ணராஜ், சோமனூர் பாலாஜி, ராஜேஷ், சின்னராஜ், தெய்வசிகாமணி, சோமணி, லோகு, காமராஜ்துல்லா கனகராஜ், கூட்டணி கட்சியான திமுக சார்பில் நகர செயலாளர்கள், குமார், வேடபட்டி தண்டபாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.