×

திருவட்டார் அருகே முதியவர் மர்ம சாவு

குலசேகரம், மார்ச் 23:திருவட்டார்  அருகே திருவரம்பு கரும்பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் அனந்த கிருஷ்ணன் (61). இவரது மனைவி ஜெகதீஸ்வரி (55). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர்களது  சொந்த வீட்டில் மின்சார வசதி இல்லாததால் ஜெகதீஸ்வரி தனது மகனுடன் வாடகை  வீட்டில் வசித்து வருகிறார். அனந்த கிருஷ்ணன் மட்டும் சொந்த வீட்டில்  தங்குவாராம். இருப்பினும் தினந்தோறும் அவர் ஜெகதீஸ்வரி இருக்கும் வாடகை  வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டுவிட்டு செல்வார். இந்த நிலையில்  சம்பவத்தன்று காலையில் உணவு சாப்பிட்டுவிட்டு சொந்த வீட்டுக்கு சென்ற அனந்த  கிருஷ்ணன் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த  அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அனந்த கிருஷ்ணன் மர்மமான  முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகதீஸ்வரி அளித்த  புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : Thiruvattar ,
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்