×

கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளிலும் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஊழியர்கள், கால்நடை துறை, சுகாதாரத்துறை, விவசாயத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றிக் கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கொள்ளிடம் அருகே உள்ள அகர எலத்தூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றியகுழு தலைவர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். மேலும் கிராமத்தில் அடிப்படை தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒன்றியகுழு உறுப்பினர் செந்தாமரைக்கண்ணன், துணைத் தலைவர் கண்ணகி, திமுக மூத்த உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Gram ,Sabha ,Kollidam Union ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...