×

திருமருகல் அருகே அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி

நாகப்பட்டினம்: திருமருகல் அருகே புறாக்கிராமம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நடந்தது. பள்ளிக் கல்வி துறை மூலம் அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு 3 மாத கால தற்காப்பு கலை பயிற்சி புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.

இதில் மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவிகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். தலைமைஆசிரியர் மாணிக்கவாசகம் முன்னிலையில் டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் பாண்டியன், வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். திருமருகல், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, அம்பல் உள்ளிட்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags : Tirumarukal ,
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்