×

தூத்துக்குடியில் துணிகரம் ஓஎன்ஜிசி மாஜி அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் கொள்ளை

தூத்துக்குடி, மார்ச் 22: தூத்துக்குடியில் ஓஎன்ஜிசி மாஜி அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (69). ஓஎன்ஜிசியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன் கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக இவர், வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றார். நேற்று காலை இவரது வீட்டு ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக கருப்பசாமிக்கும், மத்திய பாகம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்த கொள்ளையர்கள், கதவை திறக்க முடியாததால் பக்கவாட்டில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். மேலும் மாடியில் உள்ள அறையிலும் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. விசாரணையில் 10 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருக்zலாம் என தெரிய வந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : ONGC ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...