×

வேதாரண்யம் அருகே 210 கிலோ போதை பொருள் பறிமுதல்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே 210 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் 210 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதை பொருள்கள் ஒழிப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு போதை பொருட்களை பறிமுதல் செய்யப்படு, அதில் தொடர்புடையவர்களை கைது செய்து வருகின்றனர்.  இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ஜவஹர், வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல் மற்றும் போலீசார் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  அப்போது அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ரகுமான், நீர்முனை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்