×

நெற்குப்பையில் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

திருப்புத்தூர், மார்ச் 21: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே நெற்குப்பையில் உள்ள அருள்மிகு வடக்கு வாசல் செல்வி என்ற பிடாரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
நெற்குப்பையில் வடக்கு வாசல் செல்வி என்ற பிடாரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத கடைசியில் இப்பகுதி மக்களால் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டு நேற்று முன்தினம் இரவு பிடாரி அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாலையிலிருந்து பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்களும், பூத்தட்டுகளும் கோயில் சன்னதியில் வைக்கப்பட்டன. பின்னர் இரவு 10 மணியளவில் பக்தர்கள் பால்குடங்களையும், பூத்தட்டுக்களையும் தலையில் சுமந்து 15 கிமீ தொலைவில் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு நடைபயணமாக சென்று நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர்.

Tags : Nelkupai ,
× RELATED திருப்புத்தூர் அருகே நெற்குப்பையில் மீன்பிடி திருவிழா