×

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையில், அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள். வரும் 31ம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுடையவர்கள் agnipathvayu.cdac.in மூலம் இணைய வழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். அக்னிவீரர்களுக்கான இணையவழி தேர்வு 20.5.2023 அன்று நடத்தப்படும். டிசம்பர் 26, 2002 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் ஜூன் 26, 2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ விளம்பர அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1525 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50,000 முதல் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.  4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு, இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

இத்திட்டம் குறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 23ம்தேதி அன்று காலை 11 மணியளவில் 2வது குறுக்கு தெரு பூம்புகார் சாலை, பாலாஜி நகர், மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04364-299790 என்ற தொலைப்பேசி எண்ணிற்கோ அல்லது 9499055804 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாகவோ தகவல் அனுப்பி முன்பதிவு செய்து கொள்வதோடு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Agniveer ,
× RELATED கடலூரில் அக்னிவீர் படைப்பிரிவில்...