×

பழநி அருகே வண்டுகள் தாக்கி தொழிலாளி பலி

பழநி, மார்ச் 21: பழநி அருகே பாலசமுத்திரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (56). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை பாலாறு அணை செல்லும் வழியிலுள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு வேலைக்கு சென்றார். அங்கு தேங்காய் பறிப்பில் ஈடுபட்டிருந்த இவரை, திடீரென அங்குள்ள கூடு கலைந்து வண்டுகள் தாக்கின.

இதனால் அதிர்ச்சியடைந்த பெருமாள் அங்கிருந்து தப்பியோட முயன்ற போது கீழே விழுந்து மயக்கமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்