×

திருப்பூரில் கிராம கோவில் பூசாரிகள் அம்மன் வேடத்தில் நூதன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 21: நலவாரியத்தை சீர்படுத்தி செயல்படுத்தக்கோரி கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அம்மன் வேடத்தில் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் திருப்பூர் கோட்ட அமைப்பாளர் சின்னக்குமரவேல் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் காசி சிவா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில், செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராமகோவில் பூசாரிகள் நலவாரியத்தை சீர்படுத்தி செயல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் மறைவுக்கு பின்னர் அவர்களது மனைவிக்கும் அதனை வழங்க வேண்டும். அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டமில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அங்காளம்மன் வேடமணிந்து நூதன முறையில் பங்கேற்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Tirupur ,Amman ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்