×

குழந்தைகள் இல்லாததால் மருமகள் தீக்குளித்து தற்கொலை மாமியாருக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே

வந்தவாசி: வந்தவாசி அருகே மருமகள் தற்கொலைக்கு காரணமான மாமியாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். வந்தவாசி அடுத்த அதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சாந்தா(45). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையாம். இதனால் செல்வத்தின் தாயார் அலமேலு(80) என்பவர் சாந்தாவிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல், கடந்த 16ம் தேதி சாந்தாவிடம் அவரது மாமியார் அலமேலு, குழந்தை இல்லாமல் இருப்பதைவிட சாவதே மேல் எனக்கூறி தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாந்தா வீட்டில் உள்ள அறைக்கு சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாராம்.

அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தா நேற்று முன்தினம் இறந்தார். இச்சம்பவம் குறித்து சாந்தா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு வழக்கு பதிந்தார். மேலும், மருமகளை தற்கொலை செய்து கொள்ள தூண்டிய மாமியார் அலமேலுவை வலைவீசி தேடி வருகிறார்.


Tags : Vandavasi ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...