×

ஈரோடு சென்ற 2000 டன் நெல்மூட்டை மாகாளிபுரம் கிராமத்தில் விவசாயிகள் இருப்பிடத்திற்கே சென்று 7.5குவிண்டால் வெல்லம் கொள்முதல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வெல்லம் கொள்முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேசிய வேளாண்மை மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன்படி பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயணி தலைமையிலும், வேளாண்மை உதவி அலுவலர் பாலமுருகன் முன்னிலையிலும் மாகாளிபுரம் கிராமத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று 7.5 குவிண்டால் வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.28 ஆயிரத்து 750 ஆகும். இதில் 10 கிலோ உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்று கொள்முதல் செய்தது. விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டு பணம் பரிவர்த்தனை செய்யப்படுவதால் வாகன செலவு, ஏற்று இறக்கு கூலிகள், நேர விரயம் உள்ளிட்டவை தவிர்க்கப்படுவதாக கூறி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Tags : Erode ,Magalipuram ,
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...