×

சின்னமனூரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சின்னமனூர், மார்ச் 20: சின்னமனூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் மெகா டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வீட்டு இணைப்புகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், மேல்நிலை, நடுநிலை, துவக்கநிலை பள்ளிகள், ஓட்டல்கள், ஹைமாஸ் விளக்குகள், தெருவிளக்குகள் என அனைத்திற்கும் மின் இணைப்புகள் கொடுத்துள்ளனர்.

இந்த டிரான்ஸ்பார்மரில் ஓவர் லோடு காரணமாக அடிக்கடி வெடித்து தீ பிடிப்பதும் பியூஸ் போவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை மின் ஊழியர்கள் அவ்வப்போது சரி செய் வெளிச்சத்தை கொடுத்து வருகின்றனர். கோடை காலம் துவங்கி விட்டதால் வெயிலும் அதிகரித்து இருப் பதால் மின்சாரத்தின் தேவை அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே வேறு இடம் தேர்வு செய்து இன்னொரு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து ஓவர் லோடு மின்சாரத்தை குறைக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அடிக்கடி டிரான்ஸ்பார்மர் வெடிக்கும் நிகழ்வு குறைந்து விடும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chinnamanur ,
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி