×

சித்தையன்கோட்டையில் சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்ட நிலம் தானம்

திண்டுக்கல், மார்ச் 20: ஆத்தூர் ஒன்றியம் சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் நெல் விவசாயிகள் அதிகம் உள்ளனர். தானியங்களை சேமிக்க தங்கள் பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்டி தர வேண்டுமென ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ,பெரியசாமியிடம் வேண்டுகோள் விடுத்தனர். சித்தையன்கோட்டையில் அரசுக்கு சொந்தமான இடங்கள் இல்லாததை சுட்டி காட்டிய அமைச்சர் ஐ,பெரியசாமி, விவசாயிகள் இடவசதி செய்து கொடுத்தால் சேமிப்பு கிடங்கு கட்டிட வசதி செய்து கொடுக்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்ட சித்தையன்கோட்டையில் தாமைரைக்குளம் அருகே சுமார் 1 ஏக்கர் 20 சென்ட் நிலத்திற்கான பத்திரத்தை நேற்றுல திண்டுக்கல்லில் உள்ள இல்லத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து வழங்கினர்.

Tags : Sidhiankottai ,
× RELATED சித்தையன்கோட்டையில் இரண்டு பஸ்ஸ்டாண்ட் இருந்தும் ‘வேஸ்ட்’