×

டெய்லரிடம் செல்போன் திருடிய ஆந்திர வாலிபர் கைது

திருச்சி, மார்ச் 19: திருச்சியில் பஸ் ஏற முயன்ற டெய்லரிடம் செல்போன் திருடிய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி அருகே துவாக்குடி பெல்நகரைச் சேர்ந்தவர் குமார்(51), டெய்லர். இவர் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள கடையில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டுக்கு செல்வதற்காக டிவிஎஸ் டோல்கேட்டில் பஸ் ஏறினார். அப்போது மர்ம நபர் அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து ஆந்திராவை சேர்ந்த யார்கலாசரண் (19) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Taylor ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...