×

விவசாயிகள் சங்க மாவட்ட பேரவை கூட்டம்

சிவகங்கை, மார்ச். 19: சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வீரபாண்டி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், நிர்வாகிகள் அழகர்சாமி, ஆறுமுகம், ஜெயராமன், அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை காளையார்கோவில் இளையான்குடி மானாமதுரை சிவகங்கை திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாகஒரு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்.

சிவகங்கைமாவட்ட விவசாயிகளை பாதுகாத்திட காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வரும் வேளாண் பட்ஜெட்டில் இத்திட்டத்தை சேர்க்க வேண்டும். ஏப்ரல்.5அன்று டில்லியில் நடைபெறும் விவசாயிகள் பேரணியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 500 விவசாயிகள் பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Farmers Union ,District Council ,
× RELATED அனைத்து பாசன, வடிகால் வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்