×

அப்பிபாளையத்தில் 21ல் மனு நீதி நாள் முகாம்

கரூர், மார்ச் 19: அப்பிபாளையத்தில் 21ம் தேதி மனு நீதி நாள் முகாம் நடைபெறுகிறது என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, அப்பிபாளையம் கிராமத்தில் மார்ச் 21ம்தேதி 3மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், பல்வேறு அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும், மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பில் கண்காட்சி ஆகியவை நடைபெறவுள்ளன. எனவே, அப்பிபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Manu ,Justice Day Camp ,Appipalayam ,
× RELATED காங்கிரஸ் போட்டி வேட்பாளர் மனு டிஸ்மிஸ்